குடிநீரை சுகாதாரமாக வழங்க மக்கள் கோரிக்கை!

கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் மேட்டு தெரு, சின்ன தெரு, ரோட்டு தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீரில் மண்புழுக்கள் வருவதும், சில நேரங்களில் குடிதண்ணீர் சேரும் சக அதிகமாக வருகிறது, இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் மேல்நிலை தேக்க தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்தனர். அப்போதும் மண்புழு குடி தண்ணீரில் கலந்து வருகிறது.
குடிநீர் வழங்கப்படும் பைப் லைனில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனை கண்டறிந்து சீரமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.