அரசு அனைத்து பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க கூடாது! கம்யூனிஸ்ட் சங்கம் கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் அரசு பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் எந்த பணிகளையும் ஒப்படைக்க கூடாது கம்யூனிஸ்ட் ஒர்க்கஸ் பார்ட்டி செண்ட் ரல் ஆர்கனசேஷன் ஆப் இந்தியா டிரேட் யூனியன் கூட்டத்திற்கு பின்னர் தென்னிந்திய பொது செயலாளர் ஆனந்தன் வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட்டம் மாநில பொதுசெயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கம்யூனிஸ்ட் ஓர்க்கஸ் பார்ட்டி செண்ட்ரல் ஆர்கனசேஷன் ஆப் இந்தியா டிரேட் யூனியன் சார்பில் தென்னிந்தியா பொதுசெயலாளர் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில் தொழிலாளர்களுக்கு கூலி நியாயமாக வழங்க வேண்டும், மேலும் முதலாளி வர்கத்திற்கு உறுதுணையாக அரசுகள் இருக்க கூடாது.
தமிழகத்தில் மருத்துவத்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் அரசு பணி ஆட்களை நியமிக்காமல் 11 மாதகாலம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டு உரிய கூலி சரியாக வழங்காமல் மீண்டும் அவர்களை பணிநீக்கம் செய்துவிட்டு வேறு ஆட்களை நியமிக்கிறார்கள்.இது தொழிலாளர் வர்கத்திற்கு எதிரான செயலாகும்.
எனவே அரசு அனைத்து பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க கூடாது, மத்திய அரசும் இத்தனை கோடி பேருக்கு வேலை என கூறுகிறார்கள். 11 மாதகாலம் மட்டும் பணியும் கூலியை வழங்கிவிட்டு பணியிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். இது ஒரு மோசடி திட்டமாகும் எனவே தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு செயல்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.