அதிரடி காட்டிய ஆற்காடு இன்ஸ்பெக்டர்!

கு.அசோக்,
ஆற்காடு பஜார் சாலையில் விதிகளை மீறி கடைகள் இருசக்கர வாகனங்களை கொண்டு ஏற்படுத்தியிருந்த ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ராணிப்பேட்டைமாவட்டம், ஆற்காடு பஜார் சாலையில் சாலை விதிமுறைகளை மீறி அதிக கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான காவல்துறையினர் ஆற்காடு பஜார் சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீரி வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் விதமாக கடைகள் வைத்தாலோ அல்லது இரு சக்கர வாகனங்களை நிறுத்தினாலோ அபராதம் விதிப்பது உட்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை எடுத்துள்ளார்.