அமைச்சர் தொடர்பாக வதந்திபரப்பியவர் மீது போலிசார் நடவடிக்கை இல்லையா?

ஜி.கே.சேகரன்,
திமுக மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மீது தவறான வதந்திகளை பரப்பிய குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காட்பாடி திமுகவினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் திமுகவினர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் மனு ஒன்றை வழங்கினர்
அதில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் கழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சர் துரைமுருகன் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோரைப் பற்றி தவறான தகவல்களை குறுஞ் செய்தியாகவும் முகநூல் வழியாகவும் வெளியிட்டு வருகிறார்.
இதனை தடுக்கும் வகையில் இது போன்ற தவறான செய்திகளை பரப்பி வரும் குடியாத்தம் குமரன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது துணை மேயர் சுனில் குமார் காட்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் வேல்முருகன். திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ். ஒன்றிய செயலாளர்கள் சரவணன். கருணாகரன். தணிகாசலம். ரவி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புகார் அளிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை அந்த புகார் மீது போலிசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம். இதே மாதிரியான புகாரை குடியாத்தம் மற்றும் ஆம்பூர் பகுதி திமுகவினரும் அளித்திருப்பதாக தகவல்.