கொலையா? தற்கொலையா! வாலாஜாவில் பரபரப்பு!

கொலையா? தற்கொலையா! வாலாஜாவில் பரபரப்பு!

 கு.அசோக்,

வாலாஜா அருகே உள்ள விவசாய கிணற்றில் 50 வயதுக்கு மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு பிரேதத்தை கைப்பற்றி வாலாஜா போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனா.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அம்மணந்தாங்கல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது. அப்படியிருக்க அங்குள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக இராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் வாலாஜாபேட்டை போலீசார் கிணற்றில் மிதந்திருந்த சடலத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அதனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

  அப்போது கிணற்றில் உள்ள சடலத்தை மீட்டுக் கொண்டிருந்த போது சடலத்தின் வயிற்றில் அம்மிக்கல்லை கயிறு கட்டி இருப்பது தெரிய வந்தது.

   மேலும் மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவா?¢  கல்லை கட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு கல்லை கட்டியிருக்கிறார்களா என வாலாஜா போலீசார் விசாரித்தனர். 

 பின்னர் பிரேதத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.