கொலையா? தற்கொலையா?

க.பாலகுரு,
திருவாரூரில் கட்டிடத்தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததால் கொலையா? தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மரணபாலம் அருகே கட்டபொம்மன் தெருவில் வசிப்பவர் கணேசன் மகன் சுரேஷ்குமார் (40). இவர் கொத்தனார் வேலைசெய்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒருமகளும், எட்டாவது படிக்கும் ஒருமகனும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்குச் செல்வதாக வீட்டைவிட்டு கிளம்பிய சுரேஷ்குமார் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்பட்ட நிலையில், சம்பவதன்று அதிகாலை கட்டபொம்மன்தெருவில் பின்புறம் உள்ள வயல்வெளியில் ஒருமரத்தில் தூக்கிலிட்டு சடலமாக ஒரு வாலிபர் தொங்குவதை அந்தப்பகுதி மக்கள் பார்த்து தெருவாசிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அதில் இறந்து போனவர் சுரேஷ்குமார் தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் இறந்தவர் நேற்று முன்தினம் இரவு அல்லது அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்ததோடு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பிரேதபரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு இறந்தவரது மனைவி ராதிகா அளித்த புகாரின் பேரில் சுரேஷ் குமார் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா... அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோனத்தில் திருவாரூர் நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.