ராஜபாளையத்தில் பட்டையை கிளப்பிய அதிமுக மதிமுக!!

ராஜபாளையத்தில் பட்டையை கிளப்பிய அதிமுக மதிமுக!!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 ராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பிறந்தநாள் முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முன்பாக கேக் வெட்டி புத்தாடை மற்றும் உணவு வழங்கினார்.

   விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு நகர அதிமுக கழகம் சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் துரை முருகேசன் தலைமையில் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பிறந்தநாள் முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முன்பாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

  பின்னர் அங்குள்ள 65 குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் உணவுகளை  வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதிமுக

 ராஜபாளையம் அருகே மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அக்கட்சித் தலைவர் துரை வைகோ பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் மதிமுகவினர் கொண்டானர்.

 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் ஜெய்சங்கர் ஏற்பாட்டில் மதிமுக 31 வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட ஒன்றிய பகுதிகளான சொக்கநாதன்புத்தூர், சேத்தூர் சோலைச்சேரி கிருஷ்ணாபுரம் செட்டியார்பட்டி ,தளவாய்புரம், உட்பட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று  மதிமுக கட்சி கொடி ஏற்றி வைத்தும் புதிய கொடி கம்பங்கள் திறந்து வைத்தனர்.

 மேலும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கினர்.

  முடிவில் மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் செந்தில் செல்வன் மதிமுக கட்சி வளர்ச்சி குறித்தும் வரலாறு குறித்தும் கட்சி செய்த சாதனைகள் குறித்தும் பொது மக்களிடையே சிறப்புரையாற்றினார்.

   இந்நிகழ்வில் ஒன்றிய பகுதி துணைச் செயலாளர்கள்ராஜகோபால் ராமசுந்தரம் அவைத்தலைவர் முருகதாஸ் செட்டியார்பட்டி நாகப்பன் உட்பட கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று மதிமுக 31-வது ஆண்டு துவக்க விழாவினையும் விரைவை கோ பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாகவும் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.