புலிப்பால் கேட்டாலும் தருவேன் அமைச்சர் காந்தி! அய்யா எங்க ஊர் சாலையை சீரமைங்க மக்கள்!

கு.அசோக்,
தன்னிடம் புலிப்பால் வேண்டுமென்று கேட்டால் புலி கிடைக்கிறதா என்ற முயற்சியில் ஈடுபடுவேன் என பேசிய அமைச்சர் ஆர்,காந்தி மாணவர்களுக்கு முடியும் என்ற சிந்தனையே இருக்க வேண்டும் முடியாது என்ற எண்ணமே இருக்க கூடாது உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட்டை தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள் சக்சஸ் கிடைக்கும் என அறிவுரை கூறினார்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 1867 ஆண்டு கட்டப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நூற்றாண்டு கடந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் இந்நாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்கள் என பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவின்போது முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் ஆர் காந்திஅதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். பின்னர் கலைஞர் ஆட்சியில் அந்த திட்டத்தின் பயன்களை அறிந்து தரமான சைக்கிள்களை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கும் விதமாக ஆட்சி செய்தார்.
¢மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர், அதனை சத்துணவு உணவு திட்டமாக மாற்றியவர் எம்ஜிஆர் ஆனால் உண்மையான சத்துணவு திட்டமாக செய்து காட்டியவர் கலைஞர் என புகழாரம் சூட்டினார் இதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் சமத்துவ ஆட்சி என தெரிவித்தார்
ஆசிரியர்கள் அனைவரும் சொந்த உணர்வோடு செயல்பட வேண்டும் அதுவே மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார்
தன்னிடம் புலிப்பால் வேண்டுமென்று கேட்டால் புலி கிடைக்கிறதா என்ற முயற்சியில் ஈடுபடுவேன் என நகைச்சுவையாக பேசிய அமைச்சர் ஆர்,காந்தி மாணவர்களுக்கு முடியும் என்ற சிந்தனையே இருக்க வேண்டும் முடியாது என்ற எண்ணமே இருக்க கூடாது உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட்டை தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள் சக்சஸ் கிடைக்கும் என அறிவுரை கூறினார்.
எங்க சாலைகளை சீர் படுத்துங்க.
இதனிடையே சோளிங்கர் அருகே வைலம்பாடி கிராமத்தில் சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வைலம்பாடி கிராமத்தில் சுமார் 350 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூடலூர், கோவிந்தாங்கல் செல்லும் சாலையில் ஏரிக்கரை அருகே உள்ள வைலாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து ஊருக்கு செல்ல சுமார் 320 மீட்டர் சாலை மோசமான நிலையில் உள்ளது.
இந்த சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட சாலை ஆகும். இந்த சாலை தற்போது ஜல்லிக்கட்டு பெயர்ந்து, ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கிறது.
இவ்வழியாக வைலம்பாடி மின்னல் கிராமத்துக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது. தினசரி இந்த வழியாக விவசாயிகள் விவசாய பொருட்கள் எடுத்துச் சொல்லவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வரவும், வேலைக்கு சென்று வரவும், கட்டிட தொழிலாளிகள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜல்லி பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நாட்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சென்று வரக் கூட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
மற்ற நாட்களில் வாகனங்கள் செல்லும் போது புழுதி கிளம்பி வாகனங்கள் ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை தார் சாலையாக மாற்றக்கோரி பலமுறை பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் அதிகாரி முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அப்போது ஒரு சாமன்யர் கூறுகையில் அமைச்சரிடம் நாங்கள் புலிப்பால் கேட்க்கவில்லை சாலைகளை போட்டுக்கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் என்றார்.