ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் டெல்லி சட்டபேரவைக்கான வாக்குபதிவு தொடங்கியது!

  ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் டெல்லி சட்டபேரவைக்கான வாக்குபதிவு தொடங்கியது!

 ஆர்.ரமேஷ்,

    ஈரோடு கிழக்கு மற்றும் டெல்லி சட்டபேரவைக்கான வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக மக்கள் பூத்துகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். 

  கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி  தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

   தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன.

 கடந்த 21-ந் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.

 இந்த தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற் மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

   இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.