கவுன்சிலர்கள் மீது புகார் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்!

கு.அசோக்,
நெமிலி பேருந்து நிலையத்தில் திமுக ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி தலைமையில் 300 கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த மாதம் மாதாந்திர கூட்டம் பெரும்பான்மை இல்லை என ரத்து செய்யப்பட்டது.
இதில் தீர்மானம் புத்தகம் வருகை பதிவேடு புத்தகத்தை ஒன்றிய குழு தலைவர் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் அதிமுக, பாமக கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு அதிகாரிகள் கவுன்சிலர்கள் தங்களை மிரட்டுவதாக நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிகழ்வின் எதிரொலியாக நெமிலி பேருந்து நிலையத்தில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பதவி விலக வேண்டும்.
கவுன்சிலர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி நெமிலி கிழக்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம் நெமிலி பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் 300 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.