மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது! பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்கியதற்காக சிறை!

மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது! பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்கியதற்காக சிறை!

கு.அசோக்,

  மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி போதை மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது சிப்காட் காவல் துறையினர் நடவடிக்கை.

  ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்தினர்¢ தெங்கால் மேல்விஷாரம் செல்லும் சாலை அருகே ஹரிஷ் (20)  உட்பட சில இளைஞர்கள் கை நரம்புகளில் ஊசி மூலம் போதை வஸ்த்துவை ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.

  உடனே இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நியூ ரபிக் மெடிக்கல் ஷாப்பில் ஒரு குறிப்பிட்ட மருந்தை  300 ரூபாய்க்கு வாங்கி வந்து அதனை இன்ஜெக்ஷன் மூலமாக நரம்பு வழியாக செலுத்தி போதை ஏற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

  மேலும் இதனை தொடர்ந்து காவல்துறையினர் நியூ ரபீக் மெடிக்கல் கடைக்கு நேரடியாக சென்று விசாரணை செய்த போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரை சீட்டுகள் இன்றி இத்தகையான போதை மருந்தை தொடர்ந்து வழங்கி வந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து காவல்துறையினர் நியூ ரபிக் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த முகமது சுல்தான் கைது செய்ததோடு பின்னர் மெடிக்கல் ஷாப் கிடைக்கும் சீல் வைத்துள்ளனர்.

  மேலும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது சுல்தான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இளைஞர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்தும் விதமாக மெடிக்கல் ஷாப் வைத்து மருத்துவரில் பரிந்துரை சான்றுகள் இல்லாமல் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எளிதில் போதை மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 குறிப்பு:- சிலவகை கொடிய நோய்களை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துவகைகளை இப்படி போதைக்காக சில இளைஞர்கள் பயன்படுத்திவருகிறார்கள். அவர்களுக்கு சில மெடிக்கல் ஷாப்புகளும் துணை போகின்றன.