அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மின்னூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான
பெருமாள் என்பவர் குடும்பத்தினருடன் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் சுற்றுச்சுவர் மேற்கூறையுடன் இடிந்து விழுந்துள்ளது.
இதில் அதே அறையில் படுத்து இருந்த பெருமாள் மற்றும் அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இருந்த போதிலும் வீட்டின் பெரும்பாலான பொருட்கள் இடிப்பாடுகளில் சிக்கி சேதம் அடைந்தது. இதுகுறித்து ஆம்பூர் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்