மெரினா பீச் அருகே போலீசை வசைபாடிய ஜோடி மீது வழக்கு பாய்ந்தது! மன்னிப்பு கேட்டு ஜகா வாங்கியும் கம்பி எண்ணுகிறார்!

ம.பா.கெஜராஜ்,

நள்ளிரவு நேரத்தில் போதையில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டி பந்தா காட்டியதுடன் உதயநிதியை கூப்பிடட்டுமா என்று சவால் விட்டு காரில் பறந்தனர்.

 இது தொடர்பாக அங்கு பணியில் இருந்த காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த ஜோடி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

  நேற்று முன் தினம் சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது.  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் காரின் அருகில் சென்று பார்த்த போது காரில் ஒரு ஆண் மற்றும் பெண் சில்மிஷம் செய்துக் கொண்டிருந்தனர்.

 நள்ளிரவு ஆகிவிட்டது, உடனே இங்கிருந்து கிளம்பும்படி போலிசார் அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

 இதனால் ஆத்திரம் அடைந்த காரில் இருந்த ஜோடி, வெளியில் வந்து போலீசாரை ஆபாசமாகவும் தெனாவட்டாகவும் பேசி பந்தா செய்தனர்.

 போலீசாரைப் பார்த்து டேய் பல்லி மூஞ்சி, வையாபுரி மூஞ்சி, நீ செக்ஸ் படம் எடுக்கிறியா, இத்து போன போனை வச்சுக்கிட்டு போடா, நான் 16 புரோ போன் வச்சிருக்கேன்.

 இன்ஸ்பெக்டரை கூப்பிடுறியா இங்க ஒரு பொம்பளை வரும் என்னைப் பார்த்தா ஓடிவிடும்.

 நாளைக்கு காலையில உங்க எல்லோர் விஷயத்தையும் எடுத்துவிடுவேன், நீங்க காத்தால டிபன் சாப்பிடமாட்டீங்க. டேய் கூப்பிடுடா எல்லோரையும் சீக்கிரம் அரெஸ்ட் பண்ணுங்கடா.

 அடிச்சுடுவேன்.... அவ்வளோ கோபம் வருது எனக்கு  போலீஸ் யூனிபார்மில் இருக்கேயேன்னு பார்க்கிறேன் என்று சவுண்டு விட்டார்.

 ஒரு கட்டத்தில் உதயதியை கூப்பிடட்டா என்று சீன் போட்டார் அந்த நபர்.

 அனைத்தையும் போலிசார் வீடியோ எடுத்துக்கொண்டு அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.

 பின்னர் சிலம்பரசன் என்கிற காவலர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் வேளச்சேரி கார் பிசினஸ் செய்யும்  சந்திரமோகன் மற்றும் அவரது காதலி தனலட்சுமி என்று தெரியவந்தது.

   சந்திரமோகனும், தனலட்சுமியும் காரில் ஜோடியாக வந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனராம். அப்படி வந்த போது நள்ளிரவு என்பதால் அவர்களை போலீஸ்காரர் விசாரித்ததால் கோபப்பட்டு, ஆபாசமாக திட்டி சண்டை போட்டு உள்ளனர்.

 இந்நிலையில் அவர்களை கைது செய்த போலிசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

 இந்நிலையில்  சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் நான் மது குடித்துவிட்டு இப்படி நடந்துக் கொண்டேன். என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி: தேவபிரகாஷ்,