ஆளுநர் மீது குற்றம் சாட்டியதை கண்டிக்கும் பிரேமலதா!

ஜி.கே.சேகரன்
தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது ஒரு பெண்மனி அவர் தவறாக பாடியதற்கு ஆளுநர் மீது குற்றம்சாட்டுவது வன்மையாக கண்டிக்கதக்கது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பள்ளி தெரு பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா உறவினரின் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர் சந்தித்தார் அப்பொழுது மழை வெள்ளத்தில் சென்னை தத்தளித்தது எந்த ஒரு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து மழை பெய்தால் இந்த தமிழக அரசு எப்படி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது மக்களுக்கு கேள்வி குறியாக உள்ளது.
அதேபோல ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து குறிப்பிட்ட சர்ச்சை எழுப்பியதற்கு தமிழ் தாய் வாழ்த்து பாடியது தூர்தர்ஷன் ஒரு பெண்மணி ஆனால் இவர் சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டு இவர் மேல் குற்றச்சாட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் நகர செயலாளர் தேவேந்திரன் மற்றும் தேமுதிக கட்சி சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.