பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செய்த முதலமைச்சர்! அஞ்சலி செலுத்திய டிஜிபி!

பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செய்த முதலமைச்சர்! அஞ்சலி செலுத்திய டிஜிபி!

கு.அசோக்,

 நாடு முழுவதும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 213 காவல்துறையினருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் டிஜிபி சங்கர் ஜூவால் அவர்கள் அதற்கான அஞ்சலியை செலுத்தினார்.

 இந்நிலையில்  தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!

அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி  வில் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று முதலமைச்சர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

  நாடு முழுவதும் காவல்துறை .சி.ஐ.எஸ்.எப் தேசிய பாதுகாப்பு படை எல்லை பாதுகாப்பு படை தொழிற்பாதுகாப்பு படை காவலர்கள் தேசிய பேரிடர் மீட்பு குழு காவலர்கள் என மொத்தம் 213 பேர் நாடு முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதலில் பலியானார்கள்.

 அவர்களுக்கு வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தேவராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்  மற்றும் முன்னாள் காவல்துறையினரும் அஞ்சலியை செலுத்தினார்கள்.

   துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலியும் செலுத்தப்பட்டது இதில் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த  பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் பணியின் போது உயிர்த்த காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது