43 துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எம்பி!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோர் தலைமையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வனாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மத்திய அரசும் மாநில அரசும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கும் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சிக்காக சுமார் 43 துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 100% வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,
புதூர் நாடு சாலை பணிகளை குறித்து பேசும்போது இயற்கை சீற்றத்தால் ஏற்படும் சாலை சரிவுகளை குறித்து இன்று 23ம் தேதி ஆய்வு மேற்கொள்ளுவதாக சொன்னார்.