உதயநிதி துணைமுதல்வர் ஆனதற்கு நன்றி தீர்மானம்!

கு.அசோக்,
வேலூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி கூட்டம் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வராக உதய நிதி ஸ்டாலினை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுக பொதுசெயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும் மேலும் பள்ளிகள் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்குவது சாலைகள் அமைத்தல்,கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல் தேவையான கிராமப்பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறு பைப் லைன் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்காக தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.