வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கே.சி.ஆர்! ரேவந்த் ரெட்டியை சந்தித்த டிஜிபி சஸ்பெண்டு!

ம.பா.கெஜராஜ்,
தெலுங்கானா முதலமைச்சராக கடந்த ஒன்பதரை ஆண்டுகள் வீற்றிருந்த கே.சந்திரசேகர சேகர ராவ் என்கிற கேசிஆர் தற்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். அவரை அகற்ற முக்கிய காரணமாக செயல்பட்டவர் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி.
இத்தனைக்கும் தெலங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த கே.சந்திரசேகர ராவுக்கு இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவைமிந்த தேர்தல் பரிசாக அளித்துள்ளது.
கே.சி.ஆரை இந்த கதிக்கு ஆளாக்கிய ரேவந்த் ரெட்டி யார்?
ஆரம்ப காலத்தில் பாஜக ஆதரவாளராகவே ரேவந்த் ரெட்டி அரசியல் பயணத்தை தொடங்கினார்.¢. பாஜகவின் அங்கமான ஏபிவிபி-யில் அவர் இருந்து, பின்னர் அங்கிருந்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம் என பல அரசியல் கட்சிகளில் தன்னை ஈடுபடுத்தினார். தெலுங்க தேச கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2004, 2009 என இரு முறை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பல அனுபவங்களை அவர் பெற்றார்.
பல முக்கிய கட்சிகளிலும் வலம் வந்த அவர் 2017-ஆம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். 2017 தொடங்கி 2023 வரை தெலங்கானா காங்கிரஸின் முகமாக கடைசித் தொண்டன் வரையிலும் அறியப்பட்டார். தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால், 2019 தேர்தலில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினரானார். அதன் மூலம் டெல்லி தலைமையின் பரிட்சயம் அவரெக்கு எட்டியது.
தெலங்கானாவில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டபோது அவருடன் பயணித்து தனது நெருக்கத்தை இன்னும் வலுவாக்கினார் ரேவந்த் ரெட்டி. தலைமைக்கு தன்னை நெருக்கமாக வைத்துக் கொள்வதில் ரெட்டி அக்கறை காட்டுகிறார் என்ற விமர்சனம் உட்கட்சிக்குள்ளேயே உண்டு.
ராகுல் காந்தி பிரச்சாரங்களை திட்டமிடுவது தொடங்கி மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம், காரசார பொதுக்கூட்ட பேச்சு என நிகழ்த்த தலைமை அவர் மீது கொண்ட நம்பிக்கையை வீணாக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.
தேர்தலுக்கு முன்னர் ரேவந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "பத்து ஆண்டுகளாக நடந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மக்களின் விருப்பங்கள் ஆட்சி செய்யும் காலத்தை தொடங்கிவைப்போம். கைகோப்போம் தெலங்கானாவை உயர்த்துவோம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரேவந்த் ரெட்டி தான் தெலங்கானாவில் அடுத்த முதல்வர் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விக்கிப்பீடியாவில் அதற்குள் யாரோ எடிட் செய்து ரேவந்த் ரெட்டி தெலங்கானா முதல்வர் என்று பதிவிட்டுலாசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.
குறிப்பு:- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அப்படியிருக்க ரேவந்த் ரெட்டிதான் முதல்வர் என்கிற நிலையில், அவரை அம்மாநில டிஜிபி அஞ்சனிகுமார் பூங்கொத்துடன் சென்று சந்தித்து ஜால்ரா போட்டார். இந்த செய்தி வெளியானவுடன் டிஜிபியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்துள்ளது.