விளை நிலங்களை சேதப்ப்படுத்தும் காட்டு யானைகள்! குறட்டைவிடும் வன அதிகாரிகள்!

நூ.அ.பிலால்,
ஆம்பூர் அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து நெல் பயிர் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்திவருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட சுட்டகுண்டா பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் கூட்டம் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் வனப்பகுதி ஒட்டியுள்ள ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்து நெற் பயிர்களையும், வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.
அதே போல் வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் விவசாயி சுதாகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களையும் சேதப்படுத்தியது.
காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும், வனத்துறையினர் விவசாய நிலங்களுக்குள் காட்டு யாணைகள் வராமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்கை போல் உள்ளதாம்.