சொல்லிட்டீங்க....கண்டிப்பா செய்துடுவாங்க! ஆனா எப்போ என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!

கு.அசோக்,
ஆம்பூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டிராக்டர் சிக்கொக்கொண்டது. அதே போல் அதில் நகராட்சி வாகனங்களும் சிக்கிவிடுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் நகராட்சி நிர்வாகமோ அல்லது சம்மந்தப்பட்ட கவுன்சிலரோ கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் வேதனைபடுகின்றனர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பு 6 வது தெருவில் சாலை மற்றும் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டது.யானால் அது மாதக்கணக்கில் அப்படியே தான் உள்ளது. இத்தனைக்கும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக அவசர அவசரமாக சாலை போடப்பட்டது.
இந்த சாலை நடுவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் பகுதி கவுன்சிலர் லட்சுமி யுவராஜிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். அவர்கள் வழக்கம் போலவே கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில், அவ்வழியாக விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மீட்க முடியவில்லை. பின்னர் மாற்று வாகனம் வரவழைத்து லோடு மாற்றிய பிறகு பள்ளத்தில் சிக்கிய டிராக்டரை மீட்டனர்.
மேலும் அவ்வழியாக செல்லும் நகராட்சி குப்பை வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
சொல்லிட்டீங்க....கண்டிப்பா செய்துடுவாங்க! ஆனா எப்போ என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.