ஜில் ஜில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்! தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிரடி!

  ஜில் ஜில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்! தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிரடி!

உ.சசிகுமார்,

ஜில் ஜில் ராணி என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை டிஸ்மிஸ் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இ.கா.ப. அவர்கள் அதிரடி காட்டியிருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராணி, இவரை ஜில் ஜில் ராணி என்றே பலரும் அழைப்பார்களாம். இவர் பணியில் பல்வேறு முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

 அதாவத்து இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்தது.

 மேலும், விபத்து இழப்பீடு வழக்குகளை தனக்கு வேண்டப்பட்ட வக்கீல்கள் வைத்து முடிப்பாராம். அப்படி முடிவுற்ற வழக்குகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் இழப்பீடு தொகைகளில் கமிஷன் பெற்றதாகவும் புகார்கள் காவல் துறை உயர் அதிகாரிளுக்கு பறந்தது.

   தொடர் புகார்களை அடுத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரைணக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜேம்ஸ் தங்கையா விசாரணை நடத்தினார். அதில் பெண் இன்ஸ்பெக்டர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மை என்பவது தெரியவந்தது.

  அதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் இன்ஸ்பெக்டர் ராணியை சஸ்பெண்டு செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்த நிலையில் தாம்பரம் ஆணையரக கூடுதல் கமிஷனர் காமினி கடந்த 7 மாதங்களாக நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் ராணி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

  இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

   இது போலிசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.