மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்! வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் பாதிப்பு!

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்! வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் பாதிப்பு!

 ஜி.கே.சேகரன்,

  தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 187.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

 இதனை அடுத்து வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் சுதந்திர பொன்விழா தெரு பகுதியைச் சேர்ந்த கீதா (40) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவருடைய மகன் இவருடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டின் அருகாமையில் இருந்த மரம் முறிந்து விழுந்து வீட்டின் கூரை மீது  இருக்கின்றன சிமெண்ட் சீட்டுகள் அனைத்தும் உடைந்து சேதம் அடைந்தது உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் வீட்டில் மேற்கூரை மீது விழுந்திருந்த மரம் அறுத்து அப்புறப்படுத்தப்பட்டது

 நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 திருப்பத்தூர் மாவட்டம்,

ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சியில் தெடர் மழையால் விழுந்ததில் டிவி மளிகை சாமான்கள் சேதமடைந்தது.

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி நான்காவது வார்டில் அஞ்சனாதேவி என்பவர் தனது மகன் உமாபதி மற்றும் மருமகள் சியாமளா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்.

 இந்நிலையில் தொடர் மழையால் அஞ்சனாதேவியின் சீமை ஓட்டு கூரையானது இடிந்து விழுந்து டிவி மற்றும் மளிகை சாமான்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.

 இதில் யாருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 இது குறித்து அஞ்சனாதேவி கூறுகையில் தாங்கள் இந்த வீட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் மழையால் வீடு சேதமடைந்ததை எடுத்து தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் அரசாங்கம் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

 அதே போல், ஆம்பூரில் வனத்துறை அலுவலகம் நுழைவாயில் பகுதியில் இருந்த புளியமரம் முறிந்து விழுந்து மின் கம்பம் மற்றும் கறிக்கடை முற்றிலும் சேதம் அடைந்தது.

  மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்தும் மின்துறை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் நான்கு மணி நேரமாகியும் ஈடுபடவில்லை.  இதனால் 20க்கும் மேற்பட்ட கடை மற்றும்  குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர்.