என்னை வெற்றி பெற வைத்தால் வழக்கறிஞர் பணியை ஓரம் வைப்பேன்! பா.ம.க. வேட்பாளர் பாலு பேச்சு!

ஜி.கே.சேகரன்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆப்சியா நஸ்ரின் ஆகியோர் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயன் தனது வேட்புமனுவினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருமான வளர்மதியிடம் தாக்கல் செய்தார். இதே போல நாம் தமிழர் கட்சியின் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடும் ஆப்சியா நஸ்ரின் தனது வேட்புமனுவினை ஆட்சியர் வளர்மதியிடம் தாக்கல் செய்தார்.
அந்த தொகுதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாமக வேட்பாளர் கே.பாலு வருகின்ற 27 ஆம் தேதியன்று மனுதாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.
அரக்கோணம் நகரில் பேசிய அவர், என்னை ஆதரித்து வெற்றி பெற செய்தால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பணியை ஓரம் வைத்துவிட்டு மக்களுக்காக முழுநேர பணியில் ஈடுபடுவேன்,
¢ அரக்கோணம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக்கூடிய அரக்கோணம் சென்னை இடையிலான மின்சார ரயில் போக்குவரத்தை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் செல்ல வழியாக வகை செய்வேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற முழு நேர பாடுபடுவேன். வருகின்ற 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வுள்ளேன் என தெரிவித்தார்.
அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜகவினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாமக நிர்வாகிகள் கிருஷ்ணன்,சரவணன்,சக்கரவர்த்தி,அமமுக பார்த்திபன் மற்றும் பாஜக நிர்வாகிகள் திரளான கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.