போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பணியினை இடையூறு செய்தால் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும்! ஆட்சியர் எச்சரிக்கை!

போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பணியினை இடையூறு செய்தால் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும்! ஆட்சியர் எச்சரிக்கை!

ஜி.கே.சேllகரன்,
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது எவ்வித தலையிடு இருந்தால் மேல் இடத்தில்   சொல்லப்படும்! போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சு,

 கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்  தலைமையில் நடைபெற்றது.

 அந்தக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் பேசுகையில் ,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் முக்கிய அனுமதி ஒன்று வழங்கியுள்ளார்.

அது என்னவென்றால்,போதைப்பொருள்  மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஈடுபடும்போது ஏதேனும் இடையூறு மற்றும் தலையீடு இருந்தால் உடனடியாக மேல் இடத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார். 
போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து அரசுக்கு மக்கள் தகவல் கொடுக்கும்படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

அப்படி தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் ரகசியம் காக்கப்படும் என்பதை எடுத்துக் கூற வேண்டும் என பேசினார்.

பின்னர் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க 9159959919 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.