அரியானா அரசு பணிகளில் ஒபிசி-க்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு! தேர்தலை மனதில் வைத்து அறிவித்தாரா முதல்வர்!

அரியானா அரசு பணிகளில் ஒபிசி-க்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு! தேர்தலை மனதில் வைத்து அறிவித்தாரா முதல்வர்!

 நரேஷ்.என்,

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்ட நிலையில், இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.

  இந்நிலையில் அரியானாவில் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளில் சேர்வதற்கான இட ஒதுக்கீடு 15-ல் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

 இதற்காண அறிவிப்பை அம்மாநில முதல்வர் பாஜகவைச் சேர்ந்த நயாப் சிங் சைனி வெளியிட்டிருக்கிறார்.

 மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் எ மற்றும் பி பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.  

  மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.