அரசு பணியாக அல்லாமல் "மக்கள் பணியாக" செய்யுங்கள், அதிகாரிகளுக்கு ஆட்சியர் அட்வைஸ்!

கு.அசோக்,
மக்களுடன் முதல்வர் திட்டத்தை கிராமப்புறங்களில் நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கான பயிற்சி கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது - பட்டா மாறுதல்கள் மின் இணைப்பு பெயர்மாற்றம் போன்ற மனுக்கள் பெறப்படுவதை முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும், அதிகாரிகளும் இதனை மக்கள் பணியாக செய்ய வேண்டும் ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேச்சு.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சிகளில் கிராமப்புறங்களில் நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில், இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் என்பது மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வெற்றிகரமாக நகர பகுதிகளில் நடத்தி முடித்தோம் .
தற்போது கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம் .
மேலும் மக்களிடம் மனுக்களை பெறும் அதிகாரிகள் அவற்றில் அவ்வப்போது பதிவு செய்து பட்டா மாற்றம் மின் இணைப்பு பெயர் மாற்றம்,பட்டா உட்பிரிவு போன்றவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
இதனை நீங்கள் அரசு பணியாக செய்யாமல் மக்கள் பணியாக மக்களுக்காக செய்ய வேண்டும் என பேசின