வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொத்தாக தூக்கப்பட்டபாஜகவினர்!

ஜி.கே.சேகரன்,
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்களை கண்டித்து வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் நிர்வாகிகள் 50க்கும் மேற்படோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருந்தாலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆகவே 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை வலுக்கட்டாயமாக தூக்கி போலீசார் கைது செய்து பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம்,
வேலூரில் பாஜக சார்பில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டபோது பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது சாலையில் நடந்து சென்றவர்களை கூட காவல்துறை கைது செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடக்கவிருந்தது. இதில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹீம் கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் ஜெகன்,பாபு உள்ளிட்டோரும் திரளான பெண்களும் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர் .
இருப்பினும் தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது படலத்தின் போது சாலையில் நடந்து சென்றிருந்தவர்களின் பிடித்து வாகனத்தில் ஏற்றம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தை முன்னிட்டு காவல்துறை அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதட்ட நிலை காணப்பட்டது மேலும் கைதானவர்கள் தமிழக அரசைக்கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூரில் அனுமதி இன்றி நடத்தப்பட்ட பாஜகவினரின் ஆர்ப்பாட்டம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் தலைமையில் பாதர் ஸ்டேட் பேங்க் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூறினர்.
அவர்கள்தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் தண்டாயுதபாணி, மாவட்ட பொது செயலாளர் கவியரசு ,ஜோலார்பேட்டை பாஜக ஒன்றிய துணைத் தலைவர் அருள், உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.