இண்டியா கூட்டணியிலிருந்து விலகவில்லையென்றால்...? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டலா?

இண்டியா கூட்டணியிலிருந்து விலகவில்லையென்றால்...? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டலா?

டி.இ.முகமது,

 ஆம் ஆத்மி கட்சி இண்டியா கூட்டணியிலிருந்து விலகவில்லை என்றால் அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று  அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டப்படுவதாக டெல்லி அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்திருக்கிறார்.

 குறிப்பாக காங்கிரசும், ஆம் ஆத்மியும், தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்களாம். இருந்த போதும் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

  டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய 6 சம்மன்களை அவர் புறக்கணித்துள்ளார். அப்படியிருக்க நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. 

  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதிஒல் டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.