ஓ.பன்னிர் செல்வத்தை பாஜக வளைக்குதா? திமுக வளைக்க பார்க்குதா?

ம.பா.கெஜராஜ்,
முன்னாள் முதல்வர் ஓ.பன்னிர் செல்வத்தின் துக்கத்தில் எடப்பாடி அண்ட் கோவினர் பங்கேற்காத சூழலில், தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வருகின்றனர்.
இதை பார்க்கும் பெரியகுளம் மக்கள் அய்யாவை பாஜக வளைக்குதா? திமுக வளைக்க பார்க்குதா? என்று கிசுகிசுக்கிறார்கள். அதே போல் எடப்பாடி குரூப்பை கழுவி கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் கடந்த மாதம் 24-ந்தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார்.
ஆகவே கட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்த ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கி உள்ளார். அவருக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிர்வாகிகள் தவிர தி.மு.க. உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள் ஆதரவான நிலையில் இருந்தனர். ஆனால் பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.
துக்க நிகழ்ச்சியில்கூட பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.
அப்படியிருக்க, பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மாநில நிர்வாகிகளான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் அவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அண்ணாமலையும் வர உள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், 30 நாட்கள் கழித்து அவரது அதிரடி அரசியல் தொடரும். அதன் பின்பு அ.தி.மு.க.வை தொண்டர்கள் பலத்துடன் மீட்டு கொண்டு வருவார் என்கிறார்கள், பார்ப்போம்.