இஸ்லாமிய குடும்பத்தின் மீது வண்ண பொடி பூசி ஹோலி கொண்டாட்டம்!!

 நரேஷ்.என்.

 மோட்டார் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தை வழிமறித்த சில இளைஞர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியும், முகத்தில் வண்ண பொடிகளை பூசியும் டார்ச்சர் செய்தனர். இது தொடர்பான வீடியோ எக்ஸ் வலைதளத்தில் வெளியான நிலையில், ஒருவனை போலிசார் கைது செய்திருக்கின்றனர்.

 இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில்  அரங்கேறியிருக்கிறது.

 இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் டூ வீலரில் கடைக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது. அவர்கள் அனைவர் கைகளிலும் வண்ண பொடிகளும் தண்ணீரும் இருந்தன.

அவற்றை இஸ்லாமிய குடும்பத்தினர் மீது வலுகட்டாயமாக பூசினர். இஜாப் அணிந்திருந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி டார்ச்சர் செய்தனர்.

 அப்போது அவர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல்கள் வெளியானதும், போலிசார் விசாரித்துஇந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது என கண்டறிந்தனர்.

 இந்த டார்ச்சர் சம்பவத்தில் ஈடுபட்ட அனிருத் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

 உத்தரபிரதேசத்தைப்பொறுத்தவரை ஹோலி பண்டிகை நேரங்களில் மசூதிகளை குறிவைத்து அவற்றின் மீது வண்ண பொடிகளை தூவுவதை அங்குள்ள சில அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆகவே ஹோலி பண்டிகையின் போது மசூதிகளை தார்பாய் போட்டு மூடி வைத்து பாதுகாக்கிறார்கள்.