கோவை மேயருக்காக நான்கு பெண் கவுன்சிலர்கள் போட்டா போட்டி!

கோவை மேயருக்காக நான்கு பெண் கவுன்சிலர்கள் போட்டா போட்டி!

த.நெல்சன்,  

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கருதப்படும் கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்த நிலையில், அவர் திடீர் என்று நேற்று முன் தினம் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

  இது என்ன ராஜதந்திரம் என்று யோசித்து முடிப்பதற்குள் திருநெல்வேலி மேயர் சரவண குமாரும் ராஜினாமா செய்து விட்டார். இவர்கள் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 ஏற்கனவே கோவை மேயர் பெண் தான் என்று சொன்னபடி கல்பனாவுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் ராஜினாமா செய்துவிட அவருக்கு பதில் யார் மேயர் என்பதில் திமுக பெண் கவுன்சிலர்களுக்கிடையே பெரும் போட்டா போட்டி ஏற்பட்டிருக்கிறது.

 4 பெண் வேட்பாளர்கள்

அடுத்த மேயராக வர தற்போது திமுகவில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பெண் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

 அதில் முன்னாள் எம்.எல்.ஏ கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்தியின் மனைவி லக்குமி இளஞ்செல்வி. 52வது வார்டிலும்,  97 வது வார்டில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதியும், 46 வது வார்டில் மீனா லோகுவும், மேலும் 34 வது வார்டில் மாலதி ஆகிய நான்கு கவுன்சிலர்கள்  இந்த போட்டியில் உள்ளார்.

  லக்குமி இளஞ்செல்வி , நிவேதா சேனாதிபதி, மீனா லோகு, மாலதி ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கடந்த முறையும் இந்த முறையும் பேச்சு அடிபடுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கோவையில் மேயர் யார் என கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட உள்ளது.