ஒரே ஒரு மாதம் எங்களிடம் ஆட்சியை கொடுங்கள்? இடைத்தேர்தலா எடைத் தேர்தலா? பாமக அன்புமணி பேட்டி!

ஒரே ஒரு மாதம் எங்களிடம் ஆட்சியை கொடுங்கள்? இடைத்தேர்தலா எடைத் தேர்தலா? பாமக அன்புமணி பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 ஒரே ஒரு மாதம் எங்களிடம் ஆட்சியை கொடுங்கள்? தற்போது நடப்பது இடைத்தேர்தலா எடைத் தேர்தலா? பாமக   விக்கிவாண்டி இடைத்தேர்தல் பஞ்சாயத்து தேர்தலை விட மோசமாக நடக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பேட்டி ஒன்றில் சொன்னார்.

 வேலூர்மாவட்டம், காட்பாடியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி கடந்த 30 ஆம் தேதி முதல் இன்று வரையில் நடைபெற்றது. இதில் 520 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர் இன்று வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க மாநில தலைவர் டாக்டகர் அன்புமணிராமதாஸ் கோப்பை பதக்கங்களை வழங்கினார் இதில் சங்க நிர்வாகிகள் மணிவண்ணன், அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    பின்னர் பாமக தலைவரும் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க மாநில தலைவருமான அன்புமணிராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இன்று வேலூரில் தமிழ்நாடு இறகு பந்து கழகம் சார்பில் பேட்மிண்டன் போட்டிகள் நடந்தது 500-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் 7 ஆண்டுகள் தமிழ்நாடு இறகு பந்து தலைவராக பொறுப்பேற்ற பின் உலக அளவில் வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். 

   100மில்லி மதுபான விற்பதாக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக திமுக அரசுக்கு மக்களை பற்றி இளைஞர்களை பற்றி பெண்களை பற்றியும் தமிழக முன்னேற்றத்தை பற்றியும் அக்கறையில்லை மதுவை திணித்து நலத்திட்டங்களை கொண்டு வேண்டுமென நிர்வாகம் செய்கிறது இது ஒரு அரசாங்கமா? இது நிர்வாக திறமையில்லாத அரசு, மற்ற மாநிலங்களில் மதுவை வைத்துகொண்டா நிர்வாகம் செய்கின்றனர்.

  தமிழ்நாட்டில் டாஸ்மாக்குக்கு 5-6 நிறுவனங்கள் மதுவை விநியோகம் செய்கின்றனர். அதில் திமுகவை சேர்ந்தவர்களின் நிறுவனங்களும் உள்ளது. அதில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு நிறுவனம் 20 சதவிகிதம் சப்ளையும், ஜெகத் ரட்சகன் நிறுவனமும் சப்ளை செய்கிறது. உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொள்கை பரப்பு செயலாளர் ஆகியோருக்காக டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்துகிறீர்களா?

  படிப்படியாக இதனை குறையுங்கள். பார்களை மூடுங்கள், இதை ஏற்க முடியாது என்றால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம். கள்ளச்சாராயம் விற்க கூடாது என சட்டமன்றத்தில் கடுமையான சட்டம் கொண்டு வந்தீர்கள், ஆனால் உங்கள் சட்டம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? திமுகவால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றால் எங்களிடம் ஒரு மாதம் ஆட்சியை கொடுத்தால் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இருக்காது.

   விழுப்புரம் பி.குமாரமங்கலத்தில் முதியவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளார் 10 நாட்களிலேயே கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்ததை அடுத்து மீண்டும் கள்ளச்சாராய சாவு இதுதான் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதா? அசிங்கமாக இருக்கிறது.

  சி.பி.சி.ஐடி விசாரணை என ஏன் கூறுகிறீர்கள்? இது காவல்துறையினர் பெரிய அரசியல்வாதிகளும் ஈடுபட்டுள்ளனர்.  உண்மை வெளியில் வராது. எனவே சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, காவல்துறை உயரதிகாரிகள் அரசியல்வாதிகளும் இதில் தொடர்பில் உள்ளனர் அதனால் தான் சி.பி,ஐ விசாரணை கேட்கிறோம்.

 எல்லா சமுதாய மக்களும் தான் கள்ளகுறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். விக்கிவாண்டியில் இடைத்தேர்தல் பஞ்சாயத்து தேர்தலை விட மோசமாக நடக்கிறது. அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அங்கு பணியாற்றுகின்றனர்.¢ தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

 நேற்று கூட வீடுவீடாக வினியோகம் செய்ய வந்திருந்த புடவைகள் சட்டைகள் வேட்டிகளை பறிமுதல் செய்தோம் ஆனால் இன்று வீடுவீடாக மீண்டும் திமுவினர் கொடுக்கின்றனர்.

  மேலும் 2 ஆயிரம் பணம் தருவதாக கூறி பெண்களை அழைத்து சென்று ஓர் இடத்தில் அடைத்து வைக்கின்றனர் பெண்கள் திமுககாரனை நம்பி சென்றால் என்னவாகும் அந்த தொகுதியில் ஒன்று வளர்ச்சி கிடையாது.  நந்தன் கால்வாய் திட்டத்தை 50 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டுள்ளோம். விக்கிவாண்டி இடைத்தேர்தல் அது எடைத்தேர்தல்.

 சமூக நீதிக்கும் திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. செல்வபெருந்தகை முதல்வரை சந்தித்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லுங்கள். இப்போது 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலைப்படுவதாக இல்லை. ஓராண்டிற்குள் கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் 69  விழுக்காட்டை நியாயப்படுத்துங்கள்.

  8 ஆம் தேதி விடுமுறைக்கு பின் 69 விழுக்காடு தரவுகள் உள்ளதா என உச்சநீதிமன்றம் கேட்கும். தமிழக அரசு தரவுகள் இல்லை என்றால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். திமுக ஸ்டாலினின் பெயர் கருப்பில் எழுதப்படும். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. ஏன் முதல்வர் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பயப்படுகிறார். 

 பீகாரில் நடத்தினார்கள் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்தியாவில் ஒரு ஜாதி வாரி கணக்கெடுப்பை கூட நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.  இட ஒதுக்கீட்டால் எந்த சமுதாயம் வளர்ச்சி பெறவில்லை என தெரிந்துகொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு மனசு கிடையாதா. மாடுகள் நாய்களை கணக்கெடுக்கின்றனர் இது என்ன வன்மம். சமூக நீதி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது.

  ஜார்கண்ட், ஒடிசா,தெலுங்கானாவில்  கணகெடுக்கின்றனர் ஆனால் நீங்கள் ஏன் தமிழகத்தில் தட்டி கழிக்கின்றனர் முதல்வருக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பயமா? என்ன பயம் என்று தெரியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். நீட் முறைகேடுகள் வெளியில் வரவேண்டும் ஆர்.எ.ஸ்பாரதி பேசியது எல்லாம் எடுத்துகொள்ள வேண்டாம். சமீபத்தில் அவர் கொஞ்சம் அப்படிதான் இருக்கிறார்.¢ பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை பேசி தமிழகத்திற்கு சுமூகமான நிலையை எட்டுவோம் என கூறினார்.