ஏரியில் கொட்டப்படும் எக்ஸ்பரி மருந்துகள்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் சதுப்பேரி ஏரிக்கரையில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொட்டியுள்ளனர் மேலும் மருத்துவ ஆய்வக கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதுடன் ஏரி பகுதி மாசடைகிறது அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
வேலூர்மாவட்டம், வேலூர் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மொனவூர் அருகில் வேலூர் பகுதியின் பெரிய ஏரியான சதுப்பேரி ஏரி உள்ளது. இதன் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள், டானிக் பாட்டில்கள், ஊசிகள் ஆகிய மருந்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
அருகில் உள்ள சில தனியார் மருத்துவமனை ஆய்வக கழிவுகளும் ரத்த மாதிரிகளும் மருத்துவ கழிவுகளையும் இங்கு கொட்டுகின்றனர். சில நேரங்களில் ஏரியிலேயே மருந்துகள் கொட்டபடுவதாலும் மூட்டை மூட்டையாக வீசப்படுவதாலும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. சிறுவர்கள் இந்த மருந்துகளை ஏரி தண்ணீரில் வீசி விளையாடுகிறார்கள்.¢ இதனால் ஏரி தண்ணீரும் மாசுபடுகிறது.
எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏரிக்கரை பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்றி அவைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்துவர்களை கடுமையாக தண்டிக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும், மாநகராட்சியும் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோருகின்றனர்