அல்லேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து போதை ஆசாமி உயிரிழந்தார்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்க,£ அல்லேரி மலை கிராமத்தின் அருகே உள்ள ஆட்டுக் கொந்தரை குக்கிராமத்தில் வசித்து வந்த சங்கர் கூலி தொழிலாளி.என்பவரை நள்ளிரவு பாம்பு கடித்துள்ளது. அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பாம்பு கடித்தால் சங்கர் அலறியதால் அருகில் இருந்த உறவினர்கள்அல்லேரி மலையில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர் அப்போது கொண்டு செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குறிப்பு ஏற்கனவே இரண்டரை வயது பெண் குழந்தை பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் குழந்தை உயிரிழந்த சம்பவத்தால் அல்லேரி மலையில் தனியாக ஓர் ஆம்புலன்ஸ் மாவட்ட ஆட்சியர் மூலம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.