உயிர் காக்க குருதி கொடை! சிஎஸ்ஐ பிஷப் ஷர்மா நித்தியானந்தம் பேச்சு!

உயிர் காக்க குருதி கொடை! சிஎஸ்ஐ பிஷப் ஷர்மா நித்தியானந்தம் பேச்சு!

கு.அசோக்,

வேலூரில் உலக ரத்த கொடையாளர் தின ஊர்வலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்

    வேலூர்மாவட்டம், வேலூர் ஊரீசு கல்லூரியில் சி.எம்.,சி மருத்துவமனையின் சார்பில் உலக ரத்தகொடையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த கொடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய திருச்சபையின் வேலூர் பேராயர் சர்மா நித்யானந்தம் கலந்துகொண்டு விழாவில் பேசினார்.

 இளைஞர்கள் உயிர்களை காக்க குருதி கொடையளிப்பது பாராட்டுகுரியது என சொல்லி ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் ஊரீசு கல்லூரியில் முதல்வர் ஆனி கமலா ப்ராளன்ஸ் உள்ளிட்டோர் ஆயிரத்திற்கும் மாணவ,மாணவிகள் ரத்த கொடை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

நோக்கில் கையில் விழிப்புணர்வு வாசகங்கள அடங்கிய பதாகைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர் இந்த ஊர்வலம் அண்ணா கலையரங்கம் அருகில் நிறைவடைந்தது.