வகுப்பறையில் அமர்ந்த கலெக்டர்! வேலூர்....திருப்பத்தூர் மாவட்டம்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் ஈவெரா நாகம்மையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட ரூ.2. 97 கோடி மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றினார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈவெரா நாகம்மையார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் காணொளி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் ரூ.2. 97 கோடி மதிப்பில் 14 வகுப்பறைகளை திறந்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி,முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி குத்துவிளக்கேற்றி வகுப்பறை கட்டிடத்தை துவங்கி வைத்தார் பின்னர் ஆட்சியர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மேயர் துணை மேயர் உள்ளிட்டோர் வகுப்பறையினுள் மாணவர் இருக்கையில் அமர்ந்து மகிழ்ந்தனர்.
திருப்பத்தூர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.07.2024) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் வாயிலாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 16 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டங்களை திறந்து வைத்து துவக்க நிகழ்வினை மேற்கொண்டார்.
தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம் கோயில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள் ஆகியோர் குத்து விளக்கேற்றி, மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
தொடர்ச்சியாக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள் வழங்கினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 11 அரசு தொடக்கப்பள்ளி வளாகங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.08 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டங்கள் என மொத்தம் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 16 அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திரு.முனிசுப்ராயன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.பழனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.