கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய செட்டப் பாக்ஸ்களை வழங்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி!

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய செட்டப் பாக்ஸ்களை வழங்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி!

ஜி.கே.சேகரன், 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அரசு புதிய செட் டாப் பாக்சுகளை கொள்முதல் செய்து தராததால் அரசு கேபிள் டிவி நலிவடைந்த நிலையில் உள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உடனடியாக புதிய செட்டப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி.

 வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம்¢ உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் துவக்கப்பட்டது. இதன் காரணமாக அதிமுக ஆட்சியில் அதிக அளவில் தொலைக்காட்சிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 இன்றைக்கு அதிக அளவு தொலைக்காட்சி வருவதற்கான அன்றைய அதிமுக ஆட்சிதான் காரணம்.

 தொலைக்காட்சிகள் சுதந்திரமாக செயல்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான்.கேபிள் டிவி நிறுவனம் மிகச் சிறந்த முறையில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. 7 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வழங்க கூடிய அளவில் லாபகரமாக இயக்கப்பட்டு வந்தது.

 ஆனால் திமுக ஆட்சியில் செட்டாப் பாக்ஸ்களை வாங்கவில்லை. புதிதாக வாங்கி வழங்கி இருந்தால் மேலும் இந்த நிறுவனம் அதிக லாபத்துடன் இயங்கியிருக்கும்.

  அதிமுக ஆட்சியில்தான் இந்தியாவிலேயே டிஜிட்டல் உரிமம் பெற்ற கேபிள் டிவி நிறுவனமாக தமிழகத்தில் துவக்கப்பட்டது.

 இன்றைக்கு அந்த நிறுவனம் நலிவடைந்துள்ளது. அதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான். இதனை உடனடியாக களைய வேண்டும். தமிழக முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உடனடியாக செட்டப் பாக்ஸ்களை புதிதாக வழங்க வேண்டும்.

 இதனை திமுக அரசு செய்யும் என்று நம்புவதாகும் அவர் கூறினார்.

 சசிகலாவின் சுற்றுப்பயணம் அதிமுகவை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர்,இது குறித்து தலைமைக் கழகத்தில் இருக்கின்ற மூத்த நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என்றும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு இது தொடர்பாக தான்   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என்று கூறினார். 

  ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு வருவதற்கு தலித் சமுதாயத்தை குறி வைப்பதாக கூறப்படுகிற என செய்தியாளர்கள் கேட்டனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது அதிமுக பொருத்தவரை அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய கட்சி என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தந்த கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது அந்த கட்சியினருக்கு தெரியாதா இப்பொழுது நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு இதற்கு நான் எப்படி கருத்து கூறுவது என்பது தெரியவில்லை என சொல்லிவிட்டு புறபட்டார்.