மலக்கழிவு அகற்றும் பணியாளர்களுக்கு மறுவாழ்வு வேண்டி ஆர்பாட்டம்!

கு.அசோக்,
வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி அலுவலகம் அருகே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதாள சாக்கடை மலக்கழிவு அகற்றும் பணியாளர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மூலம் மாற்றுப்பணியை உடனடியாக வழங்க வேண்டும்.
அதே போல், வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாகத்தில் வருடக் கணக்கில் வேலை செய்யும் துப்புரவு பணியாளருக்கு பிஎஃப் பணத்தை உடனே வழங்கிட வேண்டும்.
மரணமடைந்த தொழிலாளி குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், பத்தாண்டு காலம் வேலை செய்த தொழிலாளிக்கு செலக்சன் கிரேடு வழங்கிடவும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.