மதவாதத்திற்கும், சாதியவாதத்திற்கும் அதிமுக ஆதரவா? விசிக தலைவர் திருமாவளவன் டவுட்டு!   

மதவாதத்திற்கும், சாதியவாதத்திற்கும் அதிமுக ஆதரவா? விசிக தலைவர் திருமாவளவன் டவுட்டு!   

டி.இ.முகமது,

 நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அக்கட்சி அறிவித்துவிட்டது.

மதவாதத்திற்கும், சாதியவாதத்திற்கும் ஆதரவாக அதிமுக இந்த முடிவை எடுத்திருக்கிறதா? என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டவுட்டை கிளப்பியிருக்கிறார்.

  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

  நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவும், பாமக சார்பில் சி.அன்புமணி என்பவரும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 ஆனால் அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று கழன்றுக் கொண்டது.

 அதிமுகவின் இந்த முடிவுக்கு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 அதே நேரத்தில், அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஜனநாயக சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்ன ராஜதந்திரம் என்பது தெரியவில்லை. மதவாத, சாதியவாத சக்திகளுக்கு ஆதரவாக  அதிமுக இந்த முடிவை எடுத்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது" என திருமாவளவன் சொன்னார்.