விசிக வேட்பாளர்களின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி உழைக்கும்! திருமாவை சந்தித்த பின் செல்வபெருந்தகை பேட்டி!!

விசிக வேட்பாளர்களின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி உழைக்கும்! திருமாவை சந்தித்த பின் செல்வபெருந்தகை பேட்டி!!

U.Sasikumar,

 வரும் மக்களவைத் தேர்தலில் எந்தத் தொகுதியில் திருமாவளவனும், விசிகவினரும் போட்டியிடுகின்றனரோ அங்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்று காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சொன்னார்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை  சந்தித்தார். சென்னை, அசோக்நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு வந்த செல்வப்பெருந்தகையை திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

 அதன் பின்னர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,  தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் விசிக தலைவர் திருமாவளனை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

  வரும் மக்களவைத் தேர்தலில் எந்தத் தொகுதியில் அவரும், விசிகவினரும் போட்டியிடுகின்றனரே? அங்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உறுதி செய்வோம். காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நல்லபடியாக முடியும் என்று சொன்னார்.

  குஜராத்தில் டன் கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கான பெரிய பட்டியலே இருக்கிறது. இது தொடர்பாக அண்ணாமலை பேச வேண்டும். அதானி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு போதைப் பொருள் அனுப்பப்படுகிறது. இதை செய்வது பாஜகவை சார்ந்த தொழிலதிபர்களும், தலைவர்கள்தான் என்றார்.

 பின்னர் திருமாவளவன் குறிப்பிடுகையில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பாஜக தலைவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள திமுக பிரமுகரின்¢ பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. அவர்கள் கனவு பலிக்காது. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள்" என சொன்னார்.