வந்து பயன் பெறுங்கள்! முதல்வர் திட்டத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு!

வந்து பயன் பெறுங்கள்! முதல்வர் திட்டத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு!

 கு.அசோக்,

 வாலாஜா  அருகே கிராம பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொ ண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வளர்மதி அழைப்பு விடுத்துள்ளார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த கடப்பேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருகிற 11-ஆம் தேதி அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

 மேலும் முகாமில் 15 அரசு துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர்.

  எனவே  திருப்பாற்கடல், சுமைதாங்கி, கடப்பேரி, பாகவெளி, படியம்பாக்கம், ஆகிய 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் மீது தீர்வு காண துறைச்சார்ந்த அலுவலர்களிடம் மனுக்களை அளிக்கமாறு மாவட்ட ஆட்சியர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.