விக்கிரவாண்டி வாக்குப்பதிவு தொடங்கியது திமுக விறு....விறு....அதிமுக திரு.... திரு!

ம.பா.கெஜராஜ்,
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பரபரப்பாக தொடங்கியது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி இறந்தார். எனவே இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இதில் பங்கேற்கவில்லை என்பதினால் அதன் அனுதாபிகள் பரிதாபமாக வேடிக்கைப் பார்த்து வருகிறார்கள்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உட்பட ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கியது.
மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறும். 6 மணிக்குள் அதிக வாக்களர்கள் வாக்குசாவடிக்கு வந்திருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விக்கிரவாண்டியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடக்கிறது.
பரபரப்பாக தொடங்கியுள்ள வாக்குபதிவை அதிமுக அனுதாபிகள் பரிதாபமாக வேடிக்கைப் பார்த்து வருகிறார்கள். கூடவே தேமுதிக கூடத்தான்.