வேலூர் ஆண்கள் சிறையில் நடமாடும் செல்போன்கள்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மத்திய சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல். பாகாயம் போலீசார் விசாரணை
வேலூர் மத்திய சிறையில் நேற்று மாலை ஜெயிலர் சிவபெருமாள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ( ஆப்யார்டு) வார்டில் உள்ள கதவின் சந்தில் இரண்டு செல்போன்கள் ஒளிக்க வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.
அந்த இரண்டு செல்போனையும் பறிமுதல் செய்து வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரியின் அடிப்படையில் பாகாயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.