கொட்டும் மழையிலும் எரிந்த மர குடோன்!

கொட்டும் மழையிலும் எரிந்த மர குடோன்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் அருகே கொட்டும் மழையில் தீ பற்றி குபுகுபு வென எரிந்த மர குடோன், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு  துறையினர்.

 வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அகமது பாஷா. இவர் வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் பழைய மரப் பொருட்கள் மற்றும் கட்டைகளை, பிளாஸ்டிக் இரும்பு வைக்கும் குடோன் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

 இந்நிலையில் அந்த குடோனில் இருந்து திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி   மக்கள் அகமது பாஷா மற்றும் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அந்த குடோனில் இருந்த மரகட்டைகள் முழுவதும் குபு குபு என எரிந்து அந்த பகுதி முழுவதுமே  புகைமண்டலமானது.

 அதன் பிறகு தீயணைப்பு துறை அலுவலர் பழனி தலைமையிலான டீம் அங்கு வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

  குடியிருப்பு பகுதிக்குள் குடோனில் இருந்த மரக்கட்டைகள் எரிந்து அதிக அளவில் புகை மண்டலம் ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

  இதனால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.