தீபத்தையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம்!

கு.அசோக்,
வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல வேலூர் மாவட்ட எஸ். பி. மதிவாணன் உத்தரவிட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 12.12.2024 முதல் 15.12.2024 வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூரிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக மற்றும் இலகு-ரக வாகனங்கள் அனைத்தும் வேலூர் - கண்ணமங்கலம் - திருவண்ணாமலை வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மாறாக, அனைத்து வாகனங்களும் வேலூர் - ஆற்காடு - செய்யாறு வந்தவாசி - திண்டிவனம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் செல்லும் இலகு-ரக வாகனங்கள் மட்டும் வழக்கமாக செல்லும் வழித்தடத்திலேயே அனுமதிக்கப்படும். என்று வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன் அறிவித்துள்ளார்.