பணம் பணம் பணம்... யப்பா செந்திலு.....தொழிற்சங்கத்தை பாழ் படுத்திவிடாதே?

எம். ஏ.கண்ணன்,
திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மண்டல தற்காலிக பொது செயலாளரின் அராஜக போக்கினால் கிளை நிர்வாகிகள் புலம்பித் தவிக்கின்றனர்.
2007- ல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒட்டன்சத்திரம் கிளையில் ஓட்டுநராக பணியில் சேர்ந்த செந்தில் என்பவர் ஆளுங்கட்சியில் ஜால்ரா போட்டு 2013- ம் ஆண்டு தொழிலாளர் சங்கத்தில் துணைப் பொதுச் செயலாளர் பதவியை பெற்றார்.
பதவி ஏற்ற நாள் முதலே மத்திய சங்க பொறுப்பில் இருந்த மூத்த நிர்வாகிகளுடன் ஏற்பட்ட முரன்பாட்டின் விளைவாக 2014 ஆம் ஆண்டிலிருந்து சங்கம் சரிவர செயல்படவில்லை. இது மூத்த நிர்வாகிகளின் பரவலான கருத்து.
இந்த போக்கினால் சங்கத்தில் இருந்த பழைய உறுப்பினர்கள் பலரும் மாற்று சங்கத்திற்க்கு சென்று விட்டனராம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் உடனடியாக ஆளுங்கட்சிக்கு தாவியிருக்கிறார்.
பின்னர் பேரவை தலைவருடன் இவருக்கு இருந்த நெருங்கிய தொடர்பு இவருக்கு மண்டல பொதுச்செயலாளராக பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதிலிருந்து தான் தொடங்குகிறது இவரது ஊழல் பட்டியல் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஐந்து ஆண்டுகளாக முடங்கி கிடந்த சங்கத்தின் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என பழைய உறுப்பினர்களிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
அப்படி வசூல் செய்யும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லையாம்.
அந்த வகையில், சங்க சேமிப்பு கணக்கில் இருந்த சுமார் 15 லட்சம் ரூபாய்,உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் வசூல் செய்த பணம் எல்லாம் சுவாகாதானாம்.
இந்த பூனைக்கு யார்தான் மணிகட்டுவார்களோ?