பம்பரம் சின்னத்திற்கு வாய்ப்பில்லை ராஜா! மதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய இமெயில்!

பம்பரம் சின்னத்திற்கு வாய்ப்பில்லை ராஜா! மதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய இமெயில்!

ம.பா.கெஜராஜ்,
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது, அங்கு வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மதிமுக வேட்பாளர் உதயசூரியத்தின் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கேட்டுக் கொண்டது. ஆனால் அதை வைகோ நிராகரித்தார்.

அதன் பின்னர் திருச்சியில் நடந்த  அறிமுக கூட்டத்திலும் அமைச்சர் நேருவின் முன்னிலையில் வேட்பாளர் துரை  வைகோ நாங்கள் செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம், இல்லையென்றால் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கொக்கரித்தார்.

இது ஒரு புறம் இருக்க தங்களுக்கு பம்பரம் சின்னம் தான் ஒதுக்க வேண்டும் என்று மதிமுக தேர்தல் ஆணையத்தை நாடியது.
ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் தர முடியாது என்று கைவிரித்துவிட்டது.

ஆகவே நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்படி இருக்க இன்று காலை அதிமுகவை அலுவலக இமெயிலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு தகவலை அனுப்பி இருக்கிறது.

அதில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருக்கிறது.

ஆகவே மதிமுக திருச்சியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா? அல்லது தேர்தல் அலுவலர் ஒதுக்கும் ஏதாவது ஒரு சின்னத்தில் போட்டியிடுமா என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால் தீப்பெட்டி சின்னத்தைக் கேட்டுப் பெறப் போவதாக கூறப்படுகிறது.