சிப்காட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சிறையிலிருந்து ரிலீஸ்!

கு.அசோக்,
விவசாயிகள் என்றாலே கிள்ளுக்கீரை என்பதைப்போல் பல்வேறு கட்டங்களில் அவர்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்படுகிறார்கள். அப்படித்தான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாயும் அளவுக்கு பிரச்சனை நீண்டது.
ஆம், சிப்காட் விரிவாக்கத்திற்காக போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தமிழக முதல்வர் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டதால் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையிலிருந்து விவசாயிகள் விடுதலை செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மாசி சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடினார்கள்.
இதனால் காவல்துறையினர் விவசாயிகள் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்,ரவர்களுடன் மேலும் 7 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக முதல்வரே தலையிட்டு விடுதலை செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் 6 குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளவர்களும் மற்றும் 14 விவசாயிகளும் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை கிராம மக்கள் சிறை வாசலில் மாலை அணிவித்து உற்சாகமாக அழைத்து சென்றனர்.