மண்டல குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யவதாக பேசியதால் பரபரப்பு!

மண்டல குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யவதாக பேசியதால் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,

   வேலூர்மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என திமுக மாமன்ற உறுப்பினர்களே குற்றச்சாட்டு - திமுக மண்டல குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு

 வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மாநகராட்சி கூட்டமானது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் துணை மேயர் சுனில் மற்றும் ஆணையர் ஜானகி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஒன்றாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு பேசுகையில் தெருவிளக்குகள் எரிவதில்லை அது குறித்து பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் கழிவு நீரும் குடிநீர் கலந்து வருகிறது சாலைகள் சீர் செய்யப்படவில்லை மொத்தத்தில் ஒரு பணி கூட நடக்கவில்லை என குற்றம்சாட்டி பேசினார்.

  இதே போன்று காட்பாடியை சேர்ந்த திமுக ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா பேசுகையில் மாநகராட்சி மக்கள் பணிகளை சரிவர செய்வதில்லை மக்கள் மாமன்ற உறுப்பினராகிய எங்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர் என்ன பதில் சொல்ல முடியும்.

   தெருவிளக்குகளும் எரிவதில்லை, சாலை வசதி குடிநீர் போன்ற வசதிகளுமில்லை. ஆகவே இந்த குறைகளை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறேன். இவைகளை சரி செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன் என பேசியனார்.

 திமுகவைச் சேர்ந்த மண்டல குழு தலைவரே மாமன்ற கூட்டத்தில் இப்படி விளாசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கேட்ட மாமன்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  இதனை சமாளிக்க முயன்ற மேயர், ஆணையரிடம் மைக்கை கொடுத்து பேசவைத்தார்.

  வேலூர் மாநகராட்சியைப் பொறுத்தவரையில் திமுக கவுன்சிலர்களே சரமாரியாக கேள்வியெழுப்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு 60 வார்டுகளிலும் நிலவரம் உள்ளது. குறிப்பாக காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் சாலைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்பது கண்கூடு.