காட்பாடியில் பிடிபட்ட ஆந்திர கொலையாளி!

காட்பாடியில் பிடிபட்ட ஆந்திர கொலையாளி!

 கு.அசோக்,

ஆந்திர மாநிலத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, காட்பாடி ரயில்வே போலீசார்  ரயிலில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

   ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி மாவட்டம், கனகபள்ளி  காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கொலைச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. இது தொடர்பாக குற்ற எண் 112/2025-ன் கீழ், பாரதிய நியாய சன்ஹிதா   பிரிவு 103(1) மற்றும்   வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

   இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகால்நாதன் ரெட்டி (34) என்பவர் தலைமறைவாக இருந்தார்.

   குற்றவாளி பிரகால்நாதன் ரெட்டி, திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் (வண்டி எண்: 16853) திருப்பதி - விழுப்புரம் பாசஞ்சர் ரயிலில் தப்பிச் செல்வதாக ஆந்திர மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

   உடனே அவர்கள் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்து தகவலைப் பகிர்ந்து கொண்டனர்.

  தகவல் கிடைத்தவுடன், காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா மற்றும் எஸ்.ஐ பத்மநாபன் தலைமைக் காவலர் சபரிகுமா£, ¢தலைமைக் காவலர் ஜெயபிரகாஷ், பெண் காவலாகள் சுஜாதா, கோமதிஆகியோர் அடங்கிய குழுவினர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு விரைந்து  ரயிலில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த பிரகால்நாதன் ரெட்டியை அடையாளம் கண்டு லாவகமாகப் பிடித்தனர்.

  பிடிபட்ட நபரை காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் கனகபள்ளி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள்  ராமஞ்சி , ராஜப்பா  மற்றும் சிவகுமார்  ஆகியோரிடம் அந்த கொலையாளி பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

ரயிலில் தப்பிச் சென்ற கொலைக் குற்றவாளியை சாமர்த்தியமாகப் பிடித்த காட்பாடி ரயில்வே போலீசாரின் இந்த  நடவடிக்கையை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.